MOTTO

Education,Discipline,Purity

ESTABLISHED IN 1978

உவர்மலை விவேகானந்தா கல்லூரி

VISION




Competent citizens who cope with the erudite world.

MISSION

To create knowledgeable, skillful, disciplined and honest students by providing ameliorated learning opportunities through an analysis of the experiences of the past and present and the challenges of the future.

Monday, 2 June 2025

Technology Education at T/T/Orr's Hill Vivekananda College, Trincomalee

 


T/T/Orr’s Hill Vivekananda College in Trincomalee, Sri Lanka, has emerged as a beacon of progress in school-level technology education. With the introduction of the Technology stream at the GCE Advanced Level (A/L), the school has taken bold and forward-thinking steps to equip students with practical skills and technical knowledge aligned with modern industry demands. The establishment and growth of the Technology Unit, which offers Engineering Technology (E.Tech) and Bio-System Technology (B.Tech), stand as a remarkable academic milestone in the college’s journey.


Establishment and Leadership

The Technology Unit was first initiated during the tenure of then-Principal Mr. S. Ananthasivam, a visionary leader who laid the groundwork for introducing technology education at the school. He played a vital role in initiating the construction of laboratories and sourcing the required technical resources. His successor, Principal Mr. K. Ravithas, continued this developmental work, further enriching the academic and infrastructural facilities.

The initiative also received strong political and administrative backing. In February 2017, Hon. R. Sampanthan, MP, and Hon. K. Thurairetnasingham, MP, laid the foundation stone, symbolizing the formal beginning of the Technology Unit. Shortly thereafter, on 12th June 2017, the Additional Provincial Director of Education, Mr. Vijayananthamoorthy, officially inaugurated the academic courses, marking the start of structured teaching and learning within the Technology stream. The unit was formally launched on 1st March 2019 by Hon. K. Thurairetnasingham, MP, in a milestone event for the college.

One of the most influential figures in the success of the Technology Unit was its first Sectional Head, Mr. N. Umashankar. A tireless and passionate educator, Mr. Umashankar dedicated his full time and energy to the development of the unit. He worked with remarkable commitment to establish laboratory infrastructure, guide students through practical sessions, coordinate with staff, and lay a strong academic and operational foundation. His hard work and visionary leadership were crucial in transforming the initial concept into a successful reality. Today, his legacy continues to inspire both students and staff.

Later, the leadership was taken up by Mrs. S. Sobha, who carried forward the mission with equal dedication, ensuring the continued growth and success of both the E.Tech and B.Tech streams.


Engineering Technology (E.Tech)

The Engineering Technology stream focuses on core engineering disciplines such as mechanical, electrical, and civil engineering. Students are trained in engineering drawing, workshop techniques, and practical applications of engineering principles. With a strong emphasis on hands-on learning, the stream equips students with critical skills for pursuing careers in engineering, manufacturing, and technical services.

One of the stream’s proudest achievements was by S. Pranith, who secured 5th rank in the Trincomalee district and was successfully admitted into a university technology program—an inspiring milestone for the entire unit.


Bio-System Technology (B.Tech)

The Bio-System Technology stream integrates biology with technology, focusing on sustainable development areas such as agriculture, renewable energy, food production, and environmental technology. Students benefit from a curriculum that blends theoretical knowledge with field-based learning, allowing them to develop practical skills vital for environmentally-focused careers.

Students like M. Anushika and U. Nashikethan have brought honor to the school by achieving excellent district-level results and gaining university placements, showcasing the academic strength and career potential of the B.Tech stream.


Academic Achievements

The academic performance of the Technology Unit has been exceptional. In the 2022 A/L examinations, the B.Tech stream achieved a 100% pass rate, while the E.Tech stream reached a 90% pass rate. In total, 11 students from the Technology Unit secured university admissions—an extraordinary accomplishment considering the program's relatively recent establishment.


Challenges and Future Aspirations

Despite its successes, the Technology Unit faces challenges such as limited laboratory resources, funding constraints, and the need for more specialized teacher training. However, with ongoing support from the school administration, education authorities, and the local community, the college is actively working to overcome these hurdles.

Future development plans include:

  • Expanding and upgrading laboratory infrastructure.

  • Promoting student innovation and entrepreneurship.

  • Organizing technical workshops, exhibitions, and competitions.


Conclusion

The Technology Unit at T/T/Orr’s Hill Vivekananda College is a shining example of what visionary leadership, community support, and dedicated teaching can achieve. With pioneers like Mr. N. Umashankar, who laid a strong foundation through relentless effort, and successors like Mrs. S. Sobha, who continue to uphold its mission, the unit has become a model for technical education in the Trincomalee Education Zone.

By offering relevant, skill-based subjects such as E.Tech and B.Tech, the school is nurturing a generation of students who are technically competent, socially responsible, and prepared for the demands of a fast-evolving world.

Download As PDF

Sunday, 12 November 2023

துரிதமாக வளர்ந்து வரும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில் நுட்பப் பிரிவு

துரிதமாக வளர்ந்து வரும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில் நுட்பப் பிரிவு


உயர்த்தரப் பிரிவில் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு மேலதிகமாக நவீன வேலை உலகிற்கு மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கோடு பொறியியல் தொழில் நுட்பம் உயிர் முறைமைகள் தொழில் நுட்பம் தகவல் தொழில் நுட்பம்( ICT - Other stream ) ஆகிய துறைகளை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு அதிபர் திரு. எஸ். ஆனந்தசிவம் அவர்களின் காலத்தில் இப் பிரிவுகள் அவரால் உருவாக்கப்பட்டது.அவரின் கடின முயற்சியினால் இப்பிரிவுக்கான ஆய்வு கூடம் கிடைக்கப் பெற்றது. இப் பிரிவு உருவாக்கப்பட்டு சிறிது காலத்தில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.


அதன் பின்னர் கடமையேற்ற அதிபர் திரு.கே.ரவிதாஸ் அவர்கள் இப் பிரிவை வளர்ப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சி களை மேற்கொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். மாணவர்களின் அடைவு மட்டம் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளை மிக அவதானமாக செவிமடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதிபரின் முயற்சிகளுக்கு பிரதி அதிபராக இருந்த திரு வே. தவராஜா அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.


உயர்தரத்தில் நான்கு துறையாக இருந்த பிரிவுகளை ஏழாக அதிகரிப்பதற்கும் அதனை வளர்ப்பதற்கும் என்னுடைய முழு ஒத்துழைப்பையும் அதிபர்களான திரு.எஸ் ஆனந்தசிவம் மற்றும் திரு. கே. ரவிதாஸ் ஆகியோருக்கு வழங்கினேன்.


தொழில் நுட்பப் பிரிவின் ஆரம்பம் முதலே இப் பிரிவின் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள், விவசாயக் கல்லூரிகள், ஏனைய தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கு தெரிவாகினர்.


இதேவேளை உயர் தரத்தில் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்ப்பம் மூன்று பிரதான பாடங்களில் ஒன்றாக கற்பிக்கப் படுகின்றது. கணிதப் பிரிவில் தகவல் தொழில் நுட்பத்தை ஒரு பாடமாக கற்பவர்கள் பிற துறை என்ற வகையில் சிறப்பான பல்கலைக்கழகபாட நெறிகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.


பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் இருந்து மாணவன் எஸ். பிரனித் மாவட்டநிலை ஐந்தினைப் பெற்று பல்கலைக் கழகம் தெரிவாகியதுடன் உயிர் முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவில் இருந்து மாணவி எம். அனுசிகா மற்றும் மாணவன் உ. நசிகேதன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முறையே ஐந்து, பன்னிரெண்டாம் நிலைகளைப் பெற்று தெரிவாகினர்.


2022 ம் ஆண்டு உயர் தரப் பரீட்சைப் பெறுபெறுகளின்படி தொழில் நுட்பப் பிரிவில் இருந்து பதினொரு (11) பேர் பல்கலைக்கழகம் தெரிவாகினர். இப் பிரிவில் உயிர் முறைமைகள் தொழில் நுட்பப் பிரிவில் 100% சித்தியும் பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் 90% சித்தியும் பதிவாகி உள்ளது.


இத் துறையை வளர்ப்பதில் பழைய மாணவர்களும் பெற்றோரும் நலன் விரும்பிகளும் கூடிய பங்களிப்பினை வழங்க வேண்டும். அத்துடன் தற்போதைய பகுதித் தலைவரும் பிரதி அதிபரும் ஆசிரியர்களும் தூர நோக்குடன் செயற்படுவது அவசியம்.


இப் பிரிவு மென்மேலும் வளர எல்லாம் வல்ல மங்களநாதர் அருள் புரிவாராக.


நடராசா உமாசங்கர்

பழைய மாணவர் 

முன்னாள் பகுதித் தலைவர்/ ஆசிரியர் ICT

தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி

திருகோணமலை.

11.11.2023

Download As PDF

Friday, 3 March 2023

Tech Day 2023



 


Tech Day 2023 நிகழ்வு அதிபர் திரு. K. ரவிதாஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் பகுதித் தலைவர் திரு. நடராசா உமாசங்கர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.01.03.2023































Download As PDF

Saturday, 11 February 2023

நாற்பத்தி ஐந்தாவது அகவையில் தடம் பதிக்கும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி


 இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இப் பாடசாலையானது 1978 ம் ஆண்டு மாசித்திங்கள் பத்தாம் நாள் அன்றைய தேசியப்பேரவை உறுப்பினராகிய கௌரவ இரா சம்பந்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது இப் பாடசாலையின் பெயர் உவர்மலை தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.வி. தங்கவேல் அவர்கள் பணியாற்றினார் அப்போது 150 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் பாடசாலை இயங்கிவந்தது


அக்கால கட்டத்தில் உவர்மலை கிராம அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ஐயா தலைமையிலான நலன்விரும்பிகள் சிலரின் முயற்சியால் வீடு வீடாகச் சென்று சிறிது சிறிதாக சேகரித்த பணத்தில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கோணேசப்பெருமானதும் கண்ணகி அம்பாளதும் அருட்பார்வையின் பயனாக எமது பாடசாலை குறுகிய காலத்தில் துரித வளர்சிசி கண்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 


 

 திருகோணமலை நகரில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம்,உயிர் முறைமைகள் தொழில்நுட்பம்,பொறியியல் தொழில்நுட்பம், வேறு துறை - தகவல் தொழில்நுட்பம் ஆகிய 7 பிரதான துறைகளை உயர்தரப் பிரிவில் கொண்டுள்ள ஒரே ஒரு பாடசாலை பாடசாலையாகத் திகழ்கின்றது. 2014ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பமும் 2017ம் ஆண்டில் தொழில்நுட்பப் பிரிவும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்வி பொது சாதாரண தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் மாவட்ட மட்டத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் சாதனை படைத்துள்ளது உவர்மலை விவேகானந்தா கல்லூரி. அத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை ரீதியில் சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

 பாடசாலையின் வளர்ச்சியில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய அதிபர் ஆசிரியர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் அபாரமானவை.

 பாடசாலையில் முதலாவது அதிபராக திரு. வ.தங்கவேல் அவர்களும் தொடர்ந்து திரு கே பாலச்சந்திர ஐயர், திரு எம் மகாததேவன், திரு சி. நவரத்தினம், திரு ந விஜேந்திரன்(பதில் அதிபர் -சில மாதங்கள் )திரு ஆ. செல்வநாயகம் திரு எஸ். மதியழகன் திரு எஸ். ஆனந்தசிவம் திரு வே. தவராஜா (பதில் அதிபர் - சில மாதங்கள் )ஆகியோர் அதிபர்களா கடமையாற்றி உள்ளனர். தற்போதயை அதிபராக திரு கே.ரவிதாஸ் அவர்கள் சிறப்பாகக் கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றார்.


பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2018 ம் ஆண்டில் கல்லூரியின் நாற்பதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்லூரியின் மேனாள் முதல்வர் திரு. சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் அவர்கள் நடைபவனி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 கடந்த காலங்களில் நவோதயா மற்றும் இசுறு போன்ற திட்டங்களில் உள்வாங்கப்பட்ட இந்தப் பாடசாலை மாகாணத்தின் முதன் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதேவேளை ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் அரசின் திட் டத்தின் கீழ் இப்பாடசாலையும் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 குறுகிய காலத்தில் விரைவாக வளர்ச்சியடைந்த இப்பாடசாலை சந்தித்த சவால்களுக்கு அளவேயில்லை எனக்கூறலாம்.

உவர்மலை விவேகானந்தாவின் மைந்தர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பார் போற்றும் வண்ணம் சிறப்பான இடங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


நடராசா உமாசங்கர்

பழைய மாணவர்

தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி

திருக்கோணமலை.

10.02.2023

Download As PDF

Wednesday, 9 June 2021

உவர்மலை விவேகானந்தா எனும் காலத்தை வென்றெழுந்த அறிவாலயம்

 உவர்மலை விவேகானந்தா எனும் காலத்தை வென்றெழுந்த  அறிவாலயம்.


 இயற்கையின் பேரழகு  கொட்டிக் கிடக்கும் திருகோணமலை நகரின் வயதில் குறைந்த பாடசாலை ஒன்று  நாற்பத்தி மூன்று வருடங்களில் அபாரமான வரலாற்று சாதனைகளை படைத்து காலத்தை வென்றெழுந்த அறிவாலயமாகத் திகழ்கின்றது. 1978 மாசித் திங்கள் 10ஆம் நாள் குறைந்த வசதிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாடசாலை மிக மிகக் குறுகிய  காலத்தினுள் மாபெரும் கல்விக் கூடமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

 திருகோணமலை நகரில் கலை,  வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம்,உயிர் முறைமைகள்  தொழில்நுட்பம்,பொறியியல் தொழில்நுட்பம், வேறு துறை - தகவல் தொழில்நுட்பம் ஆகிய 7 பிரதான துறைகளை உயர்தரப் பிரிவில் கொண்டுள்ள ஒரே ஒரு பாடசாலை பாடசாலையாகத் திகழ்கின்றது.  2014ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பமும் 2017ம் ஆண்டில் தொழில்நுட்பப் பிரிவும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்வி பொது சாதாரண தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் மாவட்ட மட்டத்தில்  மட்டுமல்லாது  தேசிய அளவிலும் சாதனை படைத்துள்ளது உவர்மலை விவேகானந்தா கல்லூரி. அத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை ரீதியில் சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

 பாடசாலையின் வளர்ச்சியில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய அதிபர் ஆசிரியர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் அபாரமானவை.

 பாடசாலையில் முதலாவது அதிபராக திரு. வ.தங்கவேல் அவர்களும் தொடர்ந்து திரு கே பாலச்சந்திர ஐயர், திரு எம் மகாததேவன், திரு சி. நவரத்தினம், திரு ந விஜேந்திரன்(பதில் அதிபர் -சில மாதங்கள் )திரு ஆ. செல்வநாயகம் திரு எஸ். மதியழகன் திரு எஸ்.  ஆனந்தசிவம் திரு வே. தவராஜா (பதில் அதிபர் - சில மாதங்கள் )ஆகியோர் அதிபர்களா கடமையாற்றி உள்ளனர். தற்போதயை அதிபராக திரு கே.ரவிதாஸ் அவர்கள் கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றார்.

 கல்லூரியை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்ற அவாவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதையை அதிபரின் முயற்சிகள் சிறப்பானவை.

 கடந்த காலங்களில் நவோதயா  மற்றும் இசுறு போன்ற திட்டங்களில் உள்வாங்கப்பட்ட இந்தப் பாடசாலை மாகாணத்தின் முதன் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதேவேளை தேசிய பாடசாலையாக உள்ளீர்ப்புச் செய்யப்படுவதற்கான முன்னெடுப்புக்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.

 குறுகிய காலத்தில்  விரைவாக வளர்ச்சியடைந்த இப்பாடசாலை சந்தித்த சவால்களுக்கு அளவேயில்லை எனக்கூறலாம்.

உவர்மலை விவேகானந்தாவின் மைந்தர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பார் போற்றும் வண்ணம் சிறப்பான இடங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


நடராசா உமாசங்கர்

பழைய மாணவர்

தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி

திருக்கோணமலை.

10.06.2021



Download As PDF

Thursday, 13 May 2021

முதன் முதலாக உவர்மலை விவேகானந்தாவின் தொழில் நுப்பப் பிரிவில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் மாணவர்.

 முதன் முதலாக விவேகானந்தாவின் தொழில் நுப்பப் பிரிவில்  இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் மாணவர்.


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்பப்பிரிவின் / பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 5ம் நிலையைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை சத்தியலிங்கம்  பிரனித் என்ற மாணவன் பெற்று உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இருந்து பொறியியல் தொழில் நுப்பப் பிரிவுக்கு( Engineering Technology ) முதன் முதலாகத்  தெரிவாகும் மாணவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.


Download As PDF

Tuesday, 13 April 2021

OVC TECH GARDEN























 

Download As PDF