MOTTO

Education,Discipline,Purity

ESTABLISHED IN 1978

உவர்மலை விவேகானந்தா கல்லூரி

VISION




Competent citizens who cope with the erudite world.

MISSION

To create knowledgeable, skillful, disciplined and honest students by providing ameliorated learning opportunities through an analysis of the experiences of the past and present and the challenges of the future.

Saturday 11 February 2023

நாற்பத்தி ஐந்தாவது அகவையில் தடம் பதிக்கும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி


 இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இப் பாடசாலையானது 1978 ம் ஆண்டு மாசித்திங்கள் பத்தாம் நாள் அன்றைய தேசியப்பேரவை உறுப்பினராகிய கௌரவ இரா சம்பந்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது இப் பாடசாலையின் பெயர் உவர்மலை தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.வி. தங்கவேல் அவர்கள் பணியாற்றினார் அப்போது 150 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் பாடசாலை இயங்கிவந்தது


அக்கால கட்டத்தில் உவர்மலை கிராம அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ஐயா தலைமையிலான நலன்விரும்பிகள் சிலரின் முயற்சியால் வீடு வீடாகச் சென்று சிறிது சிறிதாக சேகரித்த பணத்தில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கோணேசப்பெருமானதும் கண்ணகி அம்பாளதும் அருட்பார்வையின் பயனாக எமது பாடசாலை குறுகிய காலத்தில் துரித வளர்சிசி கண்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 


 

 திருகோணமலை நகரில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம்,உயிர் முறைமைகள் தொழில்நுட்பம்,பொறியியல் தொழில்நுட்பம், வேறு துறை - தகவல் தொழில்நுட்பம் ஆகிய 7 பிரதான துறைகளை உயர்தரப் பிரிவில் கொண்டுள்ள ஒரே ஒரு பாடசாலை பாடசாலையாகத் திகழ்கின்றது. 2014ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பமும் 2017ம் ஆண்டில் தொழில்நுட்பப் பிரிவும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்வி பொது சாதாரண தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் மாவட்ட மட்டத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் சாதனை படைத்துள்ளது உவர்மலை விவேகானந்தா கல்லூரி. அத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை ரீதியில் சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

 பாடசாலையின் வளர்ச்சியில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய அதிபர் ஆசிரியர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் அபாரமானவை.

 பாடசாலையில் முதலாவது அதிபராக திரு. வ.தங்கவேல் அவர்களும் தொடர்ந்து திரு கே பாலச்சந்திர ஐயர், திரு எம் மகாததேவன், திரு சி. நவரத்தினம், திரு ந விஜேந்திரன்(பதில் அதிபர் -சில மாதங்கள் )திரு ஆ. செல்வநாயகம் திரு எஸ். மதியழகன் திரு எஸ். ஆனந்தசிவம் திரு வே. தவராஜா (பதில் அதிபர் - சில மாதங்கள் )ஆகியோர் அதிபர்களா கடமையாற்றி உள்ளனர். தற்போதயை அதிபராக திரு கே.ரவிதாஸ் அவர்கள் சிறப்பாகக் கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றார்.


பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2018 ம் ஆண்டில் கல்லூரியின் நாற்பதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்லூரியின் மேனாள் முதல்வர் திரு. சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் அவர்கள் நடைபவனி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 கடந்த காலங்களில் நவோதயா மற்றும் இசுறு போன்ற திட்டங்களில் உள்வாங்கப்பட்ட இந்தப் பாடசாலை மாகாணத்தின் முதன் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதேவேளை ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் அரசின் திட் டத்தின் கீழ் இப்பாடசாலையும் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 குறுகிய காலத்தில் விரைவாக வளர்ச்சியடைந்த இப்பாடசாலை சந்தித்த சவால்களுக்கு அளவேயில்லை எனக்கூறலாம்.

உவர்மலை விவேகானந்தாவின் மைந்தர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பார் போற்றும் வண்ணம் சிறப்பான இடங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


நடராசா உமாசங்கர்

பழைய மாணவர்

தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி

திருக்கோணமலை.

10.02.2023

Download As PDF